Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜாக்ஸன் முதலாமாண்டு அஞ்சலி... ரசிகர்கள் கண்ணீர்!
மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. மரணமடைந்த அவரது உடலை புதைத்து, மீண்டும் எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து, 70 நாட்கள் அலைக்கழித்த பிறகு அடக்கம் செய்தனர்.
அதே நேரம் இந்த இழப்பைத் தாங்க முடியாமல் உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் குலுங்கினர்.
மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்து இன்றுடன் சரியாக ஓராண்டு ஆகிறது. இதையொட்டி உலகம் முழுக்க உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
மைக்கேல் ஜாக்சனை கவுரவிக்கும் வகையில் மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகம் உலகம் முழுக்க 9 இடங்களில் மைக்கேல் ஜாக்சன் மெழுகுப் பொம்மைகளை வைத்துள்ளது. அந்த மெழுகுப் பொம்மை கண்காட்சியை பார்க்க மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த மெழுகு பொம்மை கண்காட்சி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரியின் குற்றச்சாட்டு!
இதற்கிடையே மைக்கேல் ஜாக்சனின் சகோதரி லடோயா நேற்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மைக்கேல் ஜாக்சன் இயற்கையாக மரணம் அடையவில்லை. அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரர் உயிர் வாழ்வதை விட இறந்தால்தான் நிறைய லாபம் கிடைக்கும் என்று ஒரு கூட்டம் நம்பியது. அவர்கள்தான் சதி செய்து மைக்கேல் ஜாக்சனைக் கொன்று விட்டனர். இதில் எனக்கு சந்தேகமே இல்லை", என்றார்.
மைக்கேலே ஜாக்ஸன் மரணம் குறித்து கடந்த ஓராண்டாக பல பரபரப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.