Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் ஒருகாலத்தில் சண்டைக்காரர்கள் தெரியுமா?.. சொல்வது அர்னால்டு
டெல்லி: நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் சண்டைக்காரர்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். அவர் பேசியதாவது:
1980களில் எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்தோம். எங்களில் ஒருவரை விட மற்றொருவர் எப்படி சிறப்பாக வெளிப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தினோம். அந்த நேரத்தில் எங்களுக்குள் எல்லாவற்றிலும் போட்டி இருந்தது. பாடி பில்டிங் முதல் படத்தில் எதிரிகளை கொன்று குவிப்பது, யார் படம் அதிக வசூலாகிறது என்பது வரை அனைத்திலும் கடும் போட்டி இருந்தது.
ஆனால், பத்தாண்டு கடும் போட்டிக்கு பிறகு 90களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். எந்த ஒரு விஷயத்திலும் முதலில் உங்களை வெறுக்கும் ஒரு போட்டியாளர் தேவை. அதுதான் என்னை இந்த அளவு வளர்ச்சிக்கு கொண்டு வந்துள்ளது.
இப்போது நாங்கள் பக்குவமாக இருக்கிறோம். சில்வர்ஸ்டாரும் நானும் இணைந்து பல படங்களில் நடிக்கிறோம். நான் செய்யும் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்யவே எப்போதும் விரும்புகிறேன். என் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை தழுவியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொருமுறை நீங்கள் தோல்வி அடையும்போதும் மீண்டும் எழுந்து இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்களை வெற்றியாளர் ஆக்கும். இவ்வாறு அவர் பேசினார்.