Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் ஒருகாலத்தில் சண்டைக்காரர்கள் தெரியுமா?.. சொல்வது அர்னால்டு
டெல்லி: நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் சண்டைக்காரர்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். அவர் பேசியதாவது:
1980களில் எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்தோம். எங்களில் ஒருவரை விட மற்றொருவர் எப்படி சிறப்பாக வெளிப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தினோம். அந்த நேரத்தில் எங்களுக்குள் எல்லாவற்றிலும் போட்டி இருந்தது. பாடி பில்டிங் முதல் படத்தில் எதிரிகளை கொன்று குவிப்பது, யார் படம் அதிக வசூலாகிறது என்பது வரை அனைத்திலும் கடும் போட்டி இருந்தது.
ஆனால், பத்தாண்டு கடும் போட்டிக்கு பிறகு 90களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். எந்த ஒரு விஷயத்திலும் முதலில் உங்களை வெறுக்கும் ஒரு போட்டியாளர் தேவை. அதுதான் என்னை இந்த அளவு வளர்ச்சிக்கு கொண்டு வந்துள்ளது.
இப்போது நாங்கள் பக்குவமாக இருக்கிறோம். சில்வர்ஸ்டாரும் நானும் இணைந்து பல படங்களில் நடிக்கிறோம். நான் செய்யும் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்யவே எப்போதும் விரும்புகிறேன். என் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை தழுவியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொருமுறை நீங்கள் தோல்வி அடையும்போதும் மீண்டும் எழுந்து இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்களை வெற்றியாளர் ஆக்கும். இவ்வாறு அவர் பேசினார்.