Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியர்கள் திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள்- அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்
டெல்லி: இந்தியா வருவதை தான் மிகவும் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர்.
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ'. இப்படத்தின் ஆடியோ ரிலீசில் கலந்து கொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை வந்திருந்தார் 67 வயது ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. அப்போது, விழா ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அவர் பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் மீண்டும் இந்தியா வந்திருந்தார் அர்னால்டு. அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-
இந்தியா வர விரும்புகிறேன்...
நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்தியாவிற்கு வருவதை நான் விரும்புகிறேன்.
கடின உழைப்பாளிகள்...
இங்கு மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளது. இங்குள்ள மக்கள் மிகவும் திறமைசாலிகளாகவும் கடின உழைப்பு மிக்கவர்களாகவும் உள்ளனர்.
மிகச் சிறந்த வரவேற்பு...
எனக்கு எப்போதுமே இங்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் விரைவில் மீண்டும் இங்கு வருவேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரசிகர் பட்டாளம்...
ஹாலிவுட் நட்சத்திரமான அர்னால்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.