முதல்ல சாமி கும்பிடுவோம்.. அப்புறமா செக்ஸ் வச்சிக்குவோம்.. டிவி பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை
தினமும் இரவு தெய்வ வழிபாடு நடத்திவிட்டு தனது கணவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வேன் என பிரபல அமெரிக்க மாடல் ஆஷ்லே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: தினமும் இரவு தெய்வ வழிபாடு நடத்திவிட்டு, அதன் பிறகு தனது கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் பிரபல அமெரிக்க மாடல் ஆஷ்லே கிரஹாம்.
அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் புகழ் பெற்ற பின்னிரவு தொலைக்காட்சி தொடர் 'எ லிட்டில் லேட் வித் லில்லி சிங்'. கனடாவை சேர்ந்த பிரபல யூடியூப் காமெடியன் லில்லி சிங் தான் இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.

லில்லி சிங்கின் நிகழ்ச்சியில் பிரபல அமெரிக்க மாடல் ஆஷ்லே கிரஹாம் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், "நானும் எனது கணவரும் இரவு நேரங்களில் பிரேயர் செய்வோம். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தெய்வ வழிபாடு நடத்தும் போது, அதன் சக்தி பெரியதாக இருக்கும்.
பிரேயர் முடிந்த பிறகு எங்கள் இருவருக்குள்ளும் ஒரு தனி உணர்வு பிறக்கும். இதையடுத்து நாங்கள் செக்ஸ் வைத்துக்கொள்வோம். இதன் மூலம் ஆன்மிக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துயிர் பிறக்கும்", என ஆஷ்லே கூறினார்.
இதை கேட்ட லில்லி சிங்கால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நேரலையிலேயே வெடித்து சிரித்துவிட்டார். ஆஷ்லேவை போல் தனக்கும் பிரேயர் நைட்ஸ் தேவைப்படுகிறது எனக் கூறி லில்லி சிங் கிண்டல் செய்தார்.


Click it and Unblock the Notifications











