Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சிறுவர்களுக்கான 3டி படமாக மாறியது... தூர்தர்ஷனின் 'ஜங்கிள் புக்'
லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்தியாவில் தோன்றிய ஜங்கிள் புக் கதையை, மிகப்பெரிய பொருட்செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் படமாக்கியுள்ளது.
இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்டு கிப்ளிங் என்பவர் தான் இந்த ஜங்கிள் புக் கதையின் ஆசிரியர்.
தூர்தர்ஷனில் வெளியாகி சிறுவர்களை மிகவும் கவர்ந்த இத்தொடரை, தற்போது திரைப்படமாக வால்ட் டிஸ்னி உருவாக்கியிருக்கிறது.
ஜங்கிள் புக்
தூர்தர்ஷனில் வெளியாகி அக்கால சிறுவர்களின் விருப்பமான கார்ட்டூன் தொடராக இருந்த ஜங்கிள் புக், தற்போது 3D திரைப்படமாக உருவெடுத்துள்ளது. 'அயர்ன் மேன்' புகழ் ஜான் பவ்ரியூ இயக்கியுள்ள இப்படத்தை, மிகுந்த பொருட்செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
குழந்தைகளுக்கான
அடர்ந்த காட்டிற்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை விலங்குகள் எடுத்து வளர்க்கும். அவ்வாறு வளரும் சிறுவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் புலியிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. சிறுவனின் பெயர் மோக்லி, புலியின் பெயர் ஷேர்கான், சிறுதையின் பெயர் பகீரா என்று இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும்.
இந்திய வம்சாவளி
இதில் நடித்திருக்கும் சிறுவன் நீல் சேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒரே மனிதன் நீல் மட்டும் தான். மற்ற விலங்குகளை அனிமேஷன் முறையில் உருவாக்கியுள்ளனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள்
படத்தின் கதாபாத்திரங்களுக்கு பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கின்றனர். நானா படேகர் புலிக்கும், பிரியங்கா சோப்ரா கரடிக்கும், ஓம் பூரி கருஞ்சிறுத்தைக்கும் குரல் கொடுத்துள்ளனர்.
இந்தியாவில்
வருகின்ற ஏப்ரல் 16 ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. ஆனால் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாக ஏப்ரல் 8 ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அந்தந்த மொழிகளில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதனால் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மொத்தத்தில் ஜங்கிள் புக் சிறுவர்களுக்கான கோடை விருந்து....