twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நகை திருட்டு விசாரணை: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லிண்ட்சே ஓட்டம்

    By Siva
    |

    Lindsay Lohan
    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்ததையடுத்து ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன் லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறிவிட்டார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹனுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் நடந்த விருந்துக்கு சென்ற லிண்ட்சே தன்னுடன் தனது சகோதரர் காய், உதவியாளர் மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத 2 ஆடவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு அவர்கள் அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள், கூலிங்கிளாஸை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு தங்கியிருந்த லோஹனை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் தான் திருடினார் என்று சந்தேகிக்காவிட்டாலும் அவர் அழைத்து வந்த அந்த பெயர் தெரிவிக்கப்படாத இருவர் மீது தான் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணையை முடித்த கையோடு லிண்ட்சே லாஸ் ஏஞ்சல்ஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

    English summary
    Lindsay Lohan deaprted Los Angeles after police quizzed her about the jewel theft at Hollywood hills home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X