Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நகை திருட்டு விசாரணை: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லிண்ட்சே ஓட்டம்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹனுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் நடந்த விருந்துக்கு சென்ற லிண்ட்சே தன்னுடன் தனது சகோதரர் காய், உதவியாளர் மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத 2 ஆடவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு அவர்கள் அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள், கூலிங்கிளாஸை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு தங்கியிருந்த லோஹனை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் தான் திருடினார் என்று சந்தேகிக்காவிட்டாலும் அவர் அழைத்து வந்த அந்த பெயர் தெரிவிக்கப்படாத இருவர் மீது தான் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணையை முடித்த கையோடு லிண்ட்சே லாஸ் ஏஞ்சல்ஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.