Don't Miss!
- News சென்னைக்கு வெளியே போறீங்களா? வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. போக்குவரத்தே மாற போகுது
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நகை திருட்டு விசாரணை: லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லிண்ட்சே ஓட்டம்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹனுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் நடந்த விருந்துக்கு சென்ற லிண்ட்சே தன்னுடன் தனது சகோதரர் காய், உதவியாளர் மற்றும் பெயர் தெரிவிக்கப்படாத 2 ஆடவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு அவர்கள் அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள், கூலிங்கிளாஸை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு தங்கியிருந்த லோஹனை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர் தான் திருடினார் என்று சந்தேகிக்காவிட்டாலும் அவர் அழைத்து வந்த அந்த பெயர் தெரிவிக்கப்படாத இருவர் மீது தான் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணையை முடித்த கையோடு லிண்ட்சே லாஸ் ஏஞ்சல்ஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.