Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ஓவர் போதை... தாறுமாறாக கார் ஓட்டி மற்றொரு காரில் 'டமார்...' பிரபல ஹாலிவுட் நாயகியின் அம்மா கைது
நியூயார்க்: போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பிரபல ஹாலிவுட் ஹீரோயினின் அம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் ஹீரோயின் லிண்ட்சே லோகன். ஃபிரீக்கி பிரைடே, ஜஸ்ட் மை லக், பாபி, சாப்டர் 27, ஜார்ஜியா ரூல், இன் அப்ரோபிரியேட் காமெடி உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
இவரது அம்மா, டினா (57). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பென்ஸ் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவர், அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திரௌபதி படத்தை குப்பைகள் என விமர்சித்த பிரபல இயக்குநர்.. மரணமாய் கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!
மோதல்
நியூயார்க்கில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றின் வெளியே வேகமாக காரை ஓட்டிச் சென்றபோது, மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதிவிட்டார். இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றாலும் அந்த கார் பலத்த சேதம் அடைந்தது.
விரட்டிய போலீஸ்
இதனால் அதிர்ச்சி அடைந்த டினா, காரை அப்படியே விட்டுவிட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்று விட்டார். விட்டுவிடுமா போலீஸ்? அவரை விரட்டிச் சென்று பிடித்தது.
ஒத்துழைக்க மறுப்பு
இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். போலீசாரின் சோதனைக்கு டினா ஒத்துழைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மீண்டும் ஆஜர்
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியதை அடுத்து விடுவிக்கப்பட்டார். அவரை நாளை, மீண்டும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
லைசென்ஸ் ரத்து
ஏற்கனவே 2013 ஆம் ஆண்டும் போதையில் வாகனம் ஓட்டி மாட்டியிருக்கிறார் டினா. பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் போதையில் கார் ஓட்டி போலீசில் மாட்டினார். அப்போது அவரது லைசென்ஸ் ரத்துசெய்யப்பட வேண்டிய நிலையில், அடுத்த முறை இப்படி நடக்காது என்று நீதிமன்றத்தில் டினா உறுதியளித்திருந்தார்.