Don't Miss!
- News விருதுநகர் தொகுதியில் ராதிகாவுக்கு சிக்கல்! போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜக நிர்வாகி
- Technology ரூ.99 எடுத்து ரெடியா வச்சிக்கோங்க.. Tata Play டிடிஎச் சேவையில் புதிய மாற்றம்!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Finance 2 ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைத்த சிஇஓ.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க..!!
- Lifestyle லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
ஜீசஸை பிரிகிறார் மடோனா
இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட முடிவெடுத்துள்ளனர். பிரிவு முடிவை முதலில் புரபோஸ் செய்தவர் ஜீசஸாம்.
கடந்த 2008ம் ஆண்டு கணவர் கய் ரிச்சியுடனான மண வாழ்க்கையை முடித்துக் கொண்டார் மடோனா. அதன் பிறகு ஜீசஸை சந்தித்தபோது நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி்ப் பழகத் தொடங்கினர்.
28 வயது வித்தியாசத்துடன் இருந்த இருவருக்கும் இடையிலான இந்த வினோதக் காதல் அனைவரையும் விழி விரிய வைத்தது. இருப்பினும் இந்தக் காதல் ஜோடி அதைக் கண்டுகொள்ளாமல் நட்பை பராமரித்து வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரிந்து விட இருவரும் தீர்மானித்து விட்டனராம். பிரிந்து விடலாம் என்று ஜீசஸ்தான் பரிந்துரைத்தாராம்.
இருவரும் தத்தமது பணிகளில் படு பிசியாக இருப்பதால் தோழமையுடன் நேரத்தை செலவழிக்க தனிமை கிடைக்காததே இந்தப் பிரிவு முடிவுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.
இதுதவிர இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் மற்றும் அனைத்து விஷயங்களிலும் ஒருமித்த கருத்து இல்லாதது ஆகியவையும் கூட பிரிவுக்குக் காரணமாம்.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த ஜீசஸ், பேசாமல் பிரிந்து விடலாம் என மடோனாவிடம் சொல்ல அவரும் ஒப்புக் கொண்டு விட்டாராம்.