Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
மணி ஹெய்ஸ்ட் ஹீரோயினையும் விடாத கொரோனா.. இது சாதாரண காய்ச்சல் இல்லை என்றும் எச்சரிக்கை!
ஸ்பெயின்: நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் நடித்துள்ள நடிகை இட்ஸியார் இட்டுனாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹேங்க்ஸ், ரிட்டா வில்சன், இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து ஸ்பானிஷ் நடிகையான இட்ஸியார் இட்டுனாவுக்கு கடந்த மார்ச் 19ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் ராக்குவெல் முரிலோ எனும் காவல் அதிகாரியாக நடித்துள்ள இட்ஸியார் இட்டுனா, மணி ஹெய்ஸ்ட் ஹீரோ புரொஃபஸரின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சிம்ரன் இதெல்லாம்? தமன்னாவை தோற்கடிச்சுட்டீங்களே.. பிக்பாஸ் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்!
ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸில் மணி ஹெய்ஸ்ட் வெளியாகி கொண்டாடப்பட்ட நிலையில், மணி ஹெய்ஸ்ட் 4வது சீசனின் வெற்றியை கொண்டாட முடியாமல், சுமார் 8 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இட்ஸியார் இட்டுனா, சாதாரண இருமலில் தொடங்கிய கொரோனா பாதிப்பு, அடுத்த நாள் பலமான காய்ச்சலில் கொண்டு தள்ளியதாகவும், கிட்டத்தட்ட 15 நாட்கள் நுகரும் தன்மையே முழுமையாக அற்றுப் போனதாகவும், இது சாதாரண காய்ச்சல் இல்லை. மிகவும் மோசமான பாதிப்புகளை உடலில் உருவாக்குகிறது.
கொரோனா தொற்று நம்மை தாக்கி விட்டால், அதன் பாதிப்பை விட மனதளவில் ஏற்படும் மாற்றம் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
கொரோனாவை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் என்றும், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் எண்ணற்ற உயிர்களை பலி கொண்டுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களை பயமுறுத்துவதற்காக இதை தெரிவிக்கவில்லை என்றும், இந்த வைரஸை அலட்சியப்படுத்தாமல், அரசு மற்றும் மருத்துவர்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என இட்ஸியார் இட்டுனா கூறியுள்ளார்.