Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து எம்ஆர் ராதா கொள்ளுப் பேரன் தயாரிக்கும் அனிமேஷன் படம்!
சென்னை: ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து எம்ஆர் ராதாவின் கொள்ளுப் பேரன் பிரபாகரன் ஹரிஹரன் ஒரு அனிமேஷன் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்களாகும்.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
நம் திரைப்படத்துறையை சேர்ந்த அனைவருக்கும் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. சமீபகாலமாக நமது திரைப்படங்கள் ஹாலிவுட்டிலேயே எடுப்பதும் நடந்துவருகிறது.
மறைந்த பிரபல நடிகர் எம்ஆர் ராதாவின் கொள்ளுப்பேரனும், மறைந்த நடிகர் எம்ஆர்ஆர் வாசுவின் பேரனுமான பிரபாகரன் ஹரிஹரன் தன்னுடைய சொந்த நிறுவனமான ஹரிகேன் ஸ்டுடியோஸ் சார்பில் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளார்.
"Bremen Town Musicians" என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இந்த அனிமேஷன் படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்களாகும்.
ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் "woolfell" என்கிற இன்னொரு அனிமேஷன் படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்தில் பிரபல இந்திய நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
இந்த இரு படங்களும் உலகஅரங்கில் இந்திய தொழிழ்நுட்ப கலைஞர்களின் திறமையை பறைசாற்றும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து பிரபாகரன் ஹரிஹரன் கூறுகையில், "நான் பரம்பரையாக சினிமா தொழிலிருந்து வந்ததாலோ என்னவோ எனக்கு சர்வதேச அளவில் படம் தயாரித்து புகழ்பெறவேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த ஆசையின் உந்துதல்தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது," என்றார்.
சமீபத்தில் இது சம்பந்தமாக ஹாலிவுட் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்திய ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திவ்யா வேணுகோபால், "நான் பிரமிப்பாக பார்த்து வியந்த ஹாலிவுட் நிறுவனங்களுடன் தொழில் நிமித்தமாக சந்திப்பு நடத்தியதே இளைஞர்களான எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம்.
எங்களுக்கு அவர்கள் தந்த ஊக்கமும், உற்சாகமும் உலகத்தரத்தில் ஒரு படம் தயாரிக்கவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்தது.
இந்த படம் அடிப்படையில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருப்பதால் உலகஅளவில் புகழ்பெற்ற இந்திய இசயமைப்பாளரிடமோ, அல்லது அதற்கு நிகரான இன்னொரு இசையமைப்பளரிடமோ பேசவுள்ளோம்," என்றார்.