Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓரல் செக்ஸ் குறித்து உளறியதால் டக்ளஸை உதறினார் கேத்தரீன் ஜெட்டா ஜோன்ஸ்!
லாஸ் ஏஞ்சலெஸ்: தான் அதிகஅளவில் வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட்டதால்தான் தனது தொண்டையில் புற்று நோய் வந்ததாக நடிகர் மைக்கேல் டக்ளஸ் கூறியதால்தான் வெறுப்புற்று அவரிடமிருந்து விலகும் முடிவுக்கு அவரது மனைவியும் நடிகையுமான கேத்தரீன் ஜெட்டா ஜோன்ஸ் வந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 13 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு இருவரும் தற்போது குட்பை சொல்லி விட்டனர்.
விவாகரத்து முடிவுக்கு கேத்தரீன்தான் முதலில் வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு டக்ளஸின் பேச்சுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஓரல் செக்ஸ்
68 வயதாகும் மைக்கேல் டக்ளஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் அதிக அளவில் ஓரல் செக்ஸில் ஈடுபட்டதாகவும், இதனால்தான் தனக்கு தொண்டையில் புற்றுநோய் வந்ததாகவும் கூறியிரு்நதார்.
டக்ளஸ் பேச்சை ரசிக்கவில்லை கேத்தரீன்
டக்ளஸின் இந்த பகிரங்கப் பேச்சை ரசிக்கவில்லையாம் கேத்தரீன். மேலும், அவர் மீது வெறுப்புற்றாராம். மேலும் டக்ளஸை விவாகரத்து செய்யவும் அவர்தான் முடிவெடுத்தாராம்.
சேரவே முடியாத மோசமான நிலை
டக்ளஸின் பேச்சால் கடும் அதிருப்தி அடைந்து இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்குப் போய் விட்டாராம் 43 வயதாகும் கேத்தரீன்.
பல மாதங்களுக்கு முன்பே வருத்தம்
ஆனால் இந்த சம்பவத்திற்கு முன்பே, அதாவது பல மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இதற்குத்தான் தேவையில்லாமல் வாயை விடக் கூடாது என்கிறார்களோ...!