Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வதந்தியில் உயிர் தப்பி.. விபத்தில் பலியான பால்வாக்கர்!
உலகெங்கும் பெருமளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ள பால்வாக்கரின் இந்த அகால மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ரசிகர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியள்ளனர்.
இந்த துயரத்திற்குக் காரணம், வெள்ளிக்கிழமைதான் பால் வாக்கர் குறித்து வதந்தி பரவியது. அவர் இறந்து விட்டதாக அந்த வதந்தி கூறியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பின்னர் இது வதந்தி என்று தெரியவரவே அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அடுத்த நாளே பால்வாக்கர் விபத்தில் மரணமடைந்தது அவர்களை அதிர வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று ஒரு சமூக வலைத்தளத்தில் 'R.I.P. Paul Walker' என்று போட்டு சிலர் வதந்தி கிளப்பியிருந்தனர். இந்தப் பக்கத்தை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பார்த்து லைக் கொடுத்திருந்தனர். அந்த பக்கத்தில் நவம்பர் 30ம் தேதி முற்பகல் 11 மணிக்கு பால்வாக்கர் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து செய்தியும் அதில் வெளியிட்டிருந்தனர். ஆனால் பின்னர் இது வதந்தி என்று தெரிய வந்தது.
பால்வாக்கரின் பிரதிநிதிகள், இது வதந்தியான செய்தி. யாரும் நம்ப வேண்டாம் என்று உடனடியாக மறுத்திருந்தனர். ஆனால் அடுத்த நாளே பால் வாக்கரின் மரணச் செய்தியை அதே பிரதிநிதிகள் வெளியிட்டபோது ரசிகர்கள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.