Don't Miss!
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- News கோவையில் அண்ணாமலை வெல்வாரா? பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தந்தி டிவி சர்வே.. வெற்றி யாருக்கு தெரியுமா?
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இளவரசர் ஹாரி என நினைத்து வாழ்த்தி, வில்லியமிடம் ‘பல்பு’ வாங்கிய ஜாக்கி சான்
லண்டன்: இளவரசர் வில்லியமை, இளவரசர் ஹாரி என நினைத்து தவறுதலாக பிரபல நடிகர் ஜாக்கிசான் வாழ்த்துக் கூறிய வேடிக்கையான சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, பிரபலமானவர்களும் சில நேரங்களில் கவனக் குறைவான காரியங்களால் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் பிரபல நடிகர் ஜாக்கிசான் நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை காட்சி ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார்.
மாநாடு...
இங்கிலாந்தில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மகன் வில்லியம் மற்றும் ஹாரியுடன் கலந்து கொண்டார்.
ஜாக்கி...
அந்த மாநாட்டிற்கு இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், மற்றும் நடிகர் ஜாக்கிசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வாழ்த்து....
இந்த நிகழ்ச்சியில் தென் துருவ பகுதியில் காயம் அடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஹாரிக்கு வாழ்த்து சொல்ல விரும்பிய ஜாக்கி, தவறுதலாக வில்லியமை ஹாரி என நினைத்து கட்டியணைத்து வாழ்த்தி விட்டாராம். பின்னர் தான் குழப்பம் விலகியதாம்.
மன்னிப்பு
இதுகுறித்து ஜாக்கி கூறும்போது, ‘வில்லியம், நான் ஹாரி அல்ல அது எனது சகோதரர் என கூறினார்.நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன் இருவரும் ஒன்றக உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.