Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமணம் எப்போது... யாருடன்?-நயன்தாரா
அவர் அளித்துள்ள பேட்டியில்,
"சமீபத்தில் நான் நடித்து வெளி வந்த ஆதவன், பாடிகார்ட், அடூர்ஸ் படங்கள் பெரும் வெற்றி (?!) பெற்றுள்ளன. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடித்த மலையாளப் படம் பாடிகார்ட் நன்றாக ஓடுகிறது.
நான் முதல் முதலாக விநாயக் டைரக்ஷனில் லட்சுமி என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதே விநாயக் இயக்கத்தில் மீண்டும் நடித்த அடூர்ஸ் படமும் வெற்றி அடைந்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படத்தில் ஆரியாவுடன் ஜோடியாக நடித்து கொண்டு இருக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஷியாம் பிரசாத் இயக்கத்திலும் நடித்து கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன்.
கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாகவும் நடிக்கிறேன். நான் பெங்களூரில் பிறந்தவள் என்றாலும் கன்னடம் பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்வேன்.
2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திரையுலகத்திற்கு வந்தேன். பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் பெயரும், புகழும் பெற வேண்டும். பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் சினிமாவுக்கு வரும் போது எனக்கு எந்த வித ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்து விட்டு போய் விட வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் வந்த பின் சினிமாவுடன் ஐக்கியமாகி விட்டேன். நான் எதிர்பார்த்திராத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்தது. சினிமாவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் படி எந்த லட்சியமும் இல்லை. நல்ல படங்கள் அமைய வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும். அது தான் என் ஆசை.
இன்றைய நிலையில் என் வாழ்க்கை நல்லபடியாகவே போய்க் கொண்டு இருக்கிறது.
என் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும்.
அது காதல் திருமணமா, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையா என்று சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. என் திருமணம் அம்மா-அப்பா அனுமதியுடன்தான் நடைபெறும். யாருடன் நடக்கும் என்பது தெரியாது..." என்று கூறியுள்ளார்.
பிரபுதேவாவுடன் உங்களை இணைத்து வரும் செய்திகளுக்கு, உங்கள் பதில் என்ன? என்ற கேள்விக்கு, 'நோ கமெண்ட்ஸ்' என்று கூறிவிட்டார் நயன்.
வரும் 6ம் தேதி முதல்வர் கருணாநிதிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன், நீங்கள் நடனம் ஆடப்போவதாக பேச்சு அடிப்படுகிறதே? என்ற கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் தந்துள்ளார். நிச்சயம் விழாவில் கலந்துகொள்வேன் என்று மட்டும் பதில் தந்துள்ளார்.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!