twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலுடன் ஜோடி சேர ஆசை: ரீமாசென் ஏக்கம்

    By Siva
    |

    உலக நாயகன் கமலஹாசன் ஜோடியாக நடிக்க ஆசையாக இருக்கிறது. இந்நாள் வரை அது நிறைவேறவில்லை என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரீமாசென்.

    இது குறித்து அவர் கூறியதாவது,

    எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வந்துள்ளன. அவை எல்லாம் வெறும் வதந்தி தான். நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. நான் உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.

    என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் பரவுவது இது இரண்டாவது முறையாகும். ஷிவ்கரன் சிங்குடன் என்னை இணைத்துப் பேசுகின்றனர். அவர் என் நண்பர்களுக்கும் மேலானவர். அவர் என் வாழ்க்கையில் வந்ததை நான் மறுக்கவில்லை.

    எனக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடந்தாலும் கண்டிப்பாக கூறுவேன். பத்மஸ்ரீ கமலஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் அந்த ஆசை இந்நாள் வரை நிறைவேறவே இல்லை என்றார்.

    English summary
    Actress Reema Sen has expressed her desire to act with Kamal. She dismissed all the news about her marriage and betrothal as rumours. Recently news are there that Reema's betrothal is over and soon she will enter into wedlock.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X