Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் - சிரஞ்சீவி
ஹைதராபாத் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் சிரஞ்சீவி கூறியதாவது:
சினிமா துறை என் பிறந்த வீடு; அரசியல் புகுந்த வீடு. பிறந்த வீடு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு சென்ற பின்னால் கணவரை பிரிந்து, பிறந்த வீட்டிற்கு போக முடியாதல்லவா? அதுபோலத்தான் நான் அரசியலுக்கு வந்ததில் தவறேதுமில்லை.
தற்போது என் எண்ணமெல்லாம் கட்சியை முழு அளவில் பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு பணி செய்வதில்தான் உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்கச் செல்வது தர்மமான செயல் இல்லை.
சமீபத்தில் ஆடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது மேலும் ஒரு சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்கும் என, வாய் தவறி கூறி விட்டேன். ஆனால், எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்குமோ சொல்ல முடியாது. என் உண்மையான நோக்கம், மனநிலை எல்லாமே இப்போது அரசியல்தான்.
கடந்த தேர்தலில் 'ரயில் இன்ஜின்' சின்னத்தால் ஏற்பட்ட குளறுபடியால் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. தேர்தல் கமிஷனரிடம் புதிய சின்னம் கேட்க நான்கு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உதயசூரியன், குடை சின்னங்களை கேட்டு தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளோம். கட்சியினர் அனைவரும் உதயசூரியன் சின்னத்தை விரும்புகின்றனர்," என்றார்.