இனி ஏனோதானோ கேரக்டர்கள் வேண்டாம்! - 'இயக்குநர்' அம்பிகா

ஹீரோயினால கலக்கிய அம்பிகா, திருமணத்துக்குப் பிறகு நடிக்க வந்த பிறகு அம்மா, அண்ணி என கிடைத்த வேடங்களையெல்லாம் செய்து வந்தார். ஒரு சில காட்சிகளே இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொள்வார்.
இப்போது அவன் இவன் படத்தில் அவருக்குக் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். கிடைக்கிற வேடங்களையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல், தேர்ந்தெடுத்து, நல்ல வேடம், பெயர் சொல்லுமளவுக்கு காட்சிகள் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறார். கூடவே அண்ணபெல்லா என்ற மலையாளப் படத்தையும் இயக்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அவன்-இவன்" படத்தில் எனது கேரக்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இனி ஏனோதானோ வேடங்களில் நடிக்க மாட்டேன்.
இப்போது மலையாளத்தில் ஷஜிலால் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இது விருதுக்காகவே உருவாகும் படம். நிச்சயம் எனது வேடம் பேசப்படும். இன்னொரு மலையாள படத்திலும் நடிக்கிறேன்.
ஒரு இயக்குநராக மலையாளத்தில் நான் அறிமுகமாகும் 'அண்ணபெல்லா" படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை," என்றார் அம்பிகா.


Click it and Unblock the Notifications











