Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி ஏனோதானோ கேரக்டர்கள் வேண்டாம்! - 'இயக்குநர்' அம்பிகா
ஹீரோயினால கலக்கிய அம்பிகா, திருமணத்துக்குப் பிறகு நடிக்க வந்த பிறகு அம்மா, அண்ணி என கிடைத்த வேடங்களையெல்லாம் செய்து வந்தார். ஒரு சில காட்சிகளே இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொள்வார்.
இப்போது அவன் இவன் படத்தில் அவருக்குக் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். கிடைக்கிற வேடங்களையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல், தேர்ந்தெடுத்து, நல்ல வேடம், பெயர் சொல்லுமளவுக்கு காட்சிகள் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறார். கூடவே அண்ணபெல்லா என்ற மலையாளப் படத்தையும் இயக்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அவன்-இவன்" படத்தில் எனது கேரக்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இனி ஏனோதானோ வேடங்களில் நடிக்க மாட்டேன்.
இப்போது மலையாளத்தில் ஷஜிலால் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இது விருதுக்காகவே உருவாகும் படம். நிச்சயம் எனது வேடம் பேசப்படும். இன்னொரு மலையாள படத்திலும் நடிக்கிறேன்.
ஒரு இயக்குநராக மலையாளத்தில் நான் அறிமுகமாகும் 'அண்ணபெல்லா" படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை," என்றார் அம்பிகா.