Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரசியல்.. எண்ணமேயில்லை!-கமல்
கமலஹாசனின் தசாவதாரம் படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அரசியல் உலகுக்கு என்னை ஏராளமான கட்சிகள், என் நண்பர்கள் அழைக்காமலில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.
வேடிக்கைக்காக, விளையாட்டாக, திடீரென ஆச்சரியம் உண்டாக்குவதற்காக ஒருவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறேன். பொறுப்பாக செயல்பட வேண்டும், உறுதியான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் அரசியலுக்கு வரவேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல நினைத்ததை நாயகன், ஹே ராம், இந்தியன், தசாவதாரம் போன்ற படங்களிலேயே சொல்லிவிட்டதாக நம்புகிறேன்.
தென்னிந்திய தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி, வடக்கில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களால் மின்ன முடியவில்லையே ஏன்?
"எனக்கு பெரிதாக எந்தக் காரணமும் தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்தியாவில் உள்ள படிப்பறிவு நிலை ஒரு காரணமாக இருக்கலாம்" என்றார்.
சரி... நீங்கள் எப்போதும் அரசியலை விட்டு விலகியிருப்பது ஏன்?
நான் எப்போது சேர்ந்து இருந்தேன், இப்போது விலக. ஆனால் ஒருவர் முழுக்க முழுக்க அரசியலை விட்டு விலகி இருக்க முடியாது. ஒன்று தனக்கு விருப்பமான ஒருவருக்கு ஓட்டு போட்டாக வேண்டும், அல்லது விருப்பம் இல்லையென்றால் ஓட்டு போடாமலாவது இருக்க வேண்டும். நான் முதல் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன் என்றார் கமல்ஹாஸன்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!