ராஜேந்தரின் புதுப் படம்-ஜோடி 2!

ஈரோட்டுக்கு வந்திருந்தார் டி.ராஜேந்தர் (விஜய டி.ராஜேந்தர் என்ற பெயரை மறுபடியும் டி.ராஜேந்தர் என்றே மாற்றி விட்டார் டி.ஆர்.). அங்கு செய்தியாளர்களிடம் தனது அடுத்த படம் குறித்து அவர் கூறுகையில்,
அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தபடத்தில் மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும்.
ஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும். இதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும்.
அடுத்து குறளரசன்!
இந்த படம் முடிந்த பிறகு குரளரசனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்க உள்ளேன்.
சிம்பு யாரைக் காதலித்தாலும் ஓ.கே.!
சிம்பு அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் யாரை காதலித்தாலும் அதை நான் ஏற்று அவருக்கு திருமணம் செய்து வைப்பேன். காதலிப்பது பெரிய தவறு இல்லை என்றார் ராஜேந்தர்.
பின்னர் அரசியல் குறித்தும் பேசினார் ராஜேந்தர். அவர் கூறுகையில், லட்சிய தி.மு.க. யாரையும் தேடிப்போகாது. வருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். எங்களுக்கு கூட்டணி முக்கியம் அல்ல. கொள்கை தான் முக்கியம் என்றார்.
மேலும் பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர். இதையும் அவரே தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











