Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எதுவும் செய்யத் தயார்!-பியாவின் தாராளம்
ஏகன் படத்தில் அறிமுகமானவர் பியா. பின்னர் பொய் சொல்லப்போறோம், கோவா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "இயல்பாகவே எனக்கு துணிச்சல் அதிகம். காரணம் பூலான் தேவியின் சொந்த ஊரான பூலான்தான் நான் பிறந்த ஊர்.
எங்க குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் எல்லோருமே ஆசிரியர்கள். என்னையும் ஆசிரியராக பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எனக்கு அந்த ஆசை இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றேன். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வேறு வழியில்லாமல் டிவி சீரியலில் நடிக்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு, தனியாக மும்பை வந்தேன். 2 நாட்கள் ஒரு ஓட்டலில் தங்கினேன். அப்புறம் ஒரு ஆதரவற்றோர் விடுதியில் போய் தங்கிக் கொண்டேன்.
டப்பிங் கலைஞராகத்தான் என் திரை வாழ்க்கை ஆரம்பமானது.
தொடர்ந்து முயற்சி செய்து, கதாநாயகி அந்தஸ்தை அடைந்து இருக்கிறேன். இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக முடிந்த வரை வி்டடுக் கொடுத்து நடிக்கிறேன். கவர்ச்சி காட்டி நடிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை.
நீச்சல் உடையில் கூட நடிக்கலாம். நான் அப்படி நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.
எனக்கு ரசிகர்கள் மனதில் இடம் வேண்டும். அதற்காக நான் எதுவும் செய்யத் தயார். இப்போதைக்கு என்னுடைய ஆசை, சென்னையில் வீடு வாங்கி குடியேறுவதுதான். ரசிகர்கள் எனக்கு அந்த வாய்ப்பை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது! என்றார் பியா.