ராணா கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை! - கே எஸ் ரவிக்குமார்

By Shankar

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ராணா படத்தின் கதையில் எந்த சிறு மாற்றமும் செய்யவில்லை. அதை ரஜினியும் விரும்பவில்லை, என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது பூரண குணமடைந்து அங்கேயே ஓய்வெடுத்து வருகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இது குறித்து அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:

ராணா படத்தின் கதை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரசனைப் பற்றியது. ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் எல்லாம் இருக்கும். பெரிய போர்க்கள யுத்த காட்சி விஸ்தாரமான அரண்மனை, தர்பார் மண்டபம் போன்றவைகளும் இருக்கும்.

இதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். ஒரு வேடம் காமெடி கேரக்டராக உருவாக்கப்பட்டு உள்ளது.

படத்தில் நான்கு முதல் ஐந்து நாயகிகள் இருப்பார்கள். அதில் தீபிகா முக்கிய நாயகியாக இருப்பார். ரஜினி உடல் நிலையை கருத்தில் கொண்டு 'ராணா' கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அப்படி மாற்றுவதை ரஜினியும் விரும்பவில்லை.

இன்னொன்று இந்த கதையே ரஜினியுடையதுதான். முழு திரைக்கதையும் அவருக்கு தெரியும். படப்பிடிப்பு துவங்கியதும் ரஜினியால் எந்த அளவுக்கு சிரமம் எடுத்து நடிக்க முடியும் என்று பார்த்து அதன்படி முடிவு செய்வேன்.

தேவைப்பட்டால் டாக்டர்களிடமும் ஆலோசனை செய்வேன். உதாரணத்துக்கு குதிரை மீது ரஜினி பறப்பது போன்ற காட்சி வந்தால் அந்த இடத்தில் அவருக்கு பதில் வேறு யாரையாவது பயன்படுத்துவேன்.

படையப்பாவை ஐந்தே மாதங்களில் முடித்தேன். ஆனால் ராணாவில் அப்படி செய்ய முடியாது.

எந்திரனில் பஞ்ச் வசனங்கள் கிடையாது. அவை ரொம்ப பழைய டெக்னிக். இந்தப் படத்தில் ஒவ்வொரு வசனமும் பவர்புல்லாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X