Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குருசிஷ்யனில் நான் நடிக்கல!-வடிவேலு
என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். இந்தப் படங்கள் குப்பையாக இருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவைதான் அவற்றை பாக்ஸ் ஆபீஸில் தூக்கி நிறுத்தியது.
இப்போது 'குருசிஷ்யன்' என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் சக்தி சிதம்பரம். இந்தப் படத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி... தன்னை வைத்து ஒரு காட்சி கூட எடுக்கப்படவில்லை. எனவே படத்துக்காக தான் வாங்கிய முன் பணத்தை உடனடியாகத் திருப்பித் தந்துவிடுவதாகவும், அந்தப் படத்தில் தான் நடித்திருப்பதாக நம்பி ரசிகர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் வடிவேலு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் கூறுகையி்ல்,
குருசிஷ்யன் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டதும் ஒரு தொகையை முன் பணமாக கொடுத்தார்கள். நான் முன் பணத்தை வாங்கி மாதக்கணக்கில் ஆகிவிட்டது. இதுவரை என்னை வைத்து ஒருநாள் கூட படப்பிடிப்பு நடத்தவில்லை. ஒருநாள் கூட நான் நடிக்கவில்லை.
இதுதொடர்பாக விசாரிப்பதற்காக, இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தை தொடர்பு கொண்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், 'குருசிஷ்யன்' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.
அதனால் ஷக்தி சிதம்பரத்தின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, எனக்கு கொடுத்த அட்வான்சை திரும்ப பெறும்படி கேட்டுக்கொண்டேன். எனக்கு, அவர்கள் கொடுத்த அட்வான்சை நான் திருப்பி கொடுத்து விடுவேன்.
'குருசிஷ்யன்' படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை இதன் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் அந்தப் படத்தில் இருப்பதாக நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாக வேண்டாம் என்றார் வடிவேலு.
என்ன பிரச்சனையோ..! விசாரிப்போம்...!