டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்!

இதுகுறித்து அலர் கூறுகையில், "உலகக்கோப்பை இறுதி போட்டி நடந்த போது நான் மும்பை படப்பிடிப்பில் இருந்தேன். ஷூட்டிங்கை விரைவாக முடித்து விட்டு மாலையில் போட்டியை முழுவதுமாகப் பார்த்தேன். என் பக்கத்து வீடுகளில் இருந்து ஒரே சத்தம்.
டோனியும் யுவராஜ்சிங் ஆடிய போது உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். இந்திய அணி வென்றதும் உடனடியாக டோனி, யுவராஜ் சிங்கை தொடர்பு கொண்டு பேசினேன். இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்", என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "ரெடி படப்பிடிப்புக்காக சல்மான்கானுடன் தாய்லாந்து போனேன். பச்சைப் பசேல் என்ற பசுமை, அழகான நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், தென்னை மரங்கன் என எங்கும் இயக்கையின் அழகு கொட்டி கிடந்தது. என் சொந்த ஊரான கேரளாவில் இருந்த உணர்வை பெற்றேன்," என்றார் அசின்.
Comments


Click it and Unblock the Notifications