Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'ஏமாத்திப்புட்டாகளே..!'
கண்ணும் கண்ணும் நாயகி உதயதாரா, 2வது நாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் மலையான். கரண் இப்படத்தின் நாயகன். இருவரும் சேர்ந்து தீ நகர் படத்தில் ஜோடி போட்டிருந்தனர்.
மலையன் படத்தில் நாயகியாக மலையாளத்து ஷம்மு நடித்திருந்தார். உதயதாராவுக்கு வெகு குறைச்சலாகவே காட்சிகள் இருந்தன. ஆனால் உண்மையில் நிறைய காட்சிகளில் நடித்திருந்தாராம் உதயா.
ஆனால் கடைசி நேரத்தில் பல காட்சிகளை வெட்டிக் கடாசி விட்டார்களாம்.
இதுகுறித்து உதயதாரா வருத்தத்துடன் கூறுகையில், இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட், இருவருக்கும் சமமான வாய்ப்பு இருக்கும் என்றுதான் இயக்குனர் கோபி சொன்னார்.
பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஹீரோவை அங்கு வேலை செய்யும் நான் காதலிப்பதாக காட்சிகள் எடுத்தார்கள். திடீரென உங்கள் கேரக்டரை மாற்றி இருக்கிறோம். ஆனாலு எடுத்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருக்கும் என்று சொல்லி புதிதாக நர்ஸ் கேரக்டரில் நடிக்க வைத்தார்கள்.
ஆனால் இப்போது பார்த்தால் பழைய காட்சிகளை எல்லாம் வெட்டி விட்டது தெரிய வந்து அதிர்ந்து போனேன். என்னை இயக்குநர் கோபி ஏமாற்றி விட்டார் என்று பொறுமித் தள்ளி விட்டார் உதயதாரா.