Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'ஏமாத்திப்புட்டாகளே..!'
கண்ணும் கண்ணும் நாயகி உதயதாரா, 2வது நாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் மலையான். கரண் இப்படத்தின் நாயகன். இருவரும் சேர்ந்து தீ நகர் படத்தில் ஜோடி போட்டிருந்தனர்.
மலையன் படத்தில் நாயகியாக மலையாளத்து ஷம்மு நடித்திருந்தார். உதயதாராவுக்கு வெகு குறைச்சலாகவே காட்சிகள் இருந்தன. ஆனால் உண்மையில் நிறைய காட்சிகளில் நடித்திருந்தாராம் உதயா.
ஆனால் கடைசி நேரத்தில் பல காட்சிகளை வெட்டிக் கடாசி விட்டார்களாம்.
இதுகுறித்து உதயதாரா வருத்தத்துடன் கூறுகையில், இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட், இருவருக்கும் சமமான வாய்ப்பு இருக்கும் என்றுதான் இயக்குனர் கோபி சொன்னார்.
பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஹீரோவை அங்கு வேலை செய்யும் நான் காதலிப்பதாக காட்சிகள் எடுத்தார்கள். திடீரென உங்கள் கேரக்டரை மாற்றி இருக்கிறோம். ஆனாலு எடுத்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருக்கும் என்று சொல்லி புதிதாக நர்ஸ் கேரக்டரில் நடிக்க வைத்தார்கள்.
ஆனால் இப்போது பார்த்தால் பழைய காட்சிகளை எல்லாம் வெட்டி விட்டது தெரிய வந்து அதிர்ந்து போனேன். என்னை இயக்குநர் கோபி ஏமாற்றி விட்டார் என்று பொறுமித் தள்ளி விட்டார் உதயதாரா.