Just In
- 24 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசு!

நேற்று நடிக்க வந்த 16 வயதுப் பெண்ணும் ரஜினி சாருடன் ஜோடியாக நடிக்கணும் என்று பெருமையுடன் சொல்வதைக் கேட்கலாம்.
ரஜினியை வைத்து என் பாணியில் வித்தியாசமான படம் பண்ணனும் என்பதே அவரை அவ்வப்போது விமர்சிக்கும் சேரனின் ஆசை!
அந்த வரிசையில் இப்போது பேரரசு.
சமீபத்தில் ஈரோட்டில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசு, தன் சொந்த செலவில் இரண்டாயிரம் பள்ளி மாண மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சி முடிவில் நிருபர்களைச் சந்தித்த அவர், "நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.
தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. திருத்தணிக்குப் பிறகு நான் இயக்கும் படம் சிவகங்கை.
ரஜினி ரசிகன்...
நான் ரஜினியின் தீவிர ரசிகன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். எல்லோரையும் போல இது ஒரு வழக்கமான கனவு என நினைத்துவிட வேண்டாம். அவருக்கான கதை, திரைக்கதை, வசனம் உள்பட பக்கா ஸ்கிரிப்ட் என்னிடம் தயாராக உள்ளது.
ராணா படத்துக்கு பின்னர் ரஜினி சாரை நிச்சயம் சந்திப்பேன்," என்றார்.