Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா
நடிகர் பிரபுதேவாவுக்கு விரைவில் இரண்டாம் தாரமாகவுள்ளார் நயனதாரா. திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பின்னர் நயனதாரா நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை மறுத்துள்ளார் நயனதாரா. இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகையில் திருமணத்துக்குப்பின் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன், ராமாயணம் தான் எனது கடைசி படம் தொடர்ந்து சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா சொல்லி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்த தகவல்களை நான் சொன்னதாக வெளியிட்டு இருந்தார்கள்.
அது போல் நான் தெலுங்கு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவே இல்லை. நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக போட்டு என்னைப்பற்றி தவறான வதந்தியை பரப்புகிறார்கள்.
அந்த பேட்டியை படித்து பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களாக கற்பனையாக எழுதி இருக்கிறார்கள். அந்த பத்திரிகையில் இருந்து யாரும் என்னை சந்திக்கவே இல்லை. சினிமாவுக்கு முழுக்கு போடுவது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.
என்னைப் பற்றி இது போல் பல தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவருகிறது. ஆனால் நான் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் நயனதாரா.