Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா
நடிகர் பிரபுதேவாவுக்கு விரைவில் இரண்டாம் தாரமாகவுள்ளார் நயனதாரா. திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பின்னர் நயனதாரா நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை மறுத்துள்ளார் நயனதாரா. இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகையில் திருமணத்துக்குப்பின் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன், ராமாயணம் தான் எனது கடைசி படம் தொடர்ந்து சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா சொல்லி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்த தகவல்களை நான் சொன்னதாக வெளியிட்டு இருந்தார்கள்.
அது போல் நான் தெலுங்கு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவே இல்லை. நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக போட்டு என்னைப்பற்றி தவறான வதந்தியை பரப்புகிறார்கள்.
அந்த பேட்டியை படித்து பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களாக கற்பனையாக எழுதி இருக்கிறார்கள். அந்த பத்திரிகையில் இருந்து யாரும் என்னை சந்திக்கவே இல்லை. சினிமாவுக்கு முழுக்கு போடுவது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.
என்னைப் பற்றி இது போல் பல தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவருகிறது. ஆனால் நான் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் நயனதாரா.