Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு எதிராக 'கொலவெறியில்' தமிழகம்-அண்ணாமலை கோவைக்கு ஓடினாலும் ஜெயிக்க முடியாது...ஜோதிமணி
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தூள், சாமி போன்ற கதைக்காக காத்திருக்கிறேன், அதான் லேட்-விக்ரம்
தூள், சாமி மாதிரி அதிரடி ஆக்ஷன் கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் விக்ரம்.
சமீபத்தில் தனது புதிய படம் ஒன்றிற்காக நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தில், தூள், சாமி போன்ற படங்களில், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே சரியாக இருந்தது.
அந்த மாதிரி படங்களில் நடிக்கததான் நான் விரும்புகிறேன். எனது அடுத்த படம் இந்த மாதிரி அமையும்.
கிளாஸிக், மசாலா என எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் நடிக்கவே நான் விரும்புகிறேன்.
எனது ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுவதை இனி தவிர்க்க முயற்சித்து வருகிறேன். இந்த இடைவெளியை நானாக விரும்பி தேடிப்போவதில்லை. சில படங்களில் அப்படியாகிவிடுகிறது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை," என்றார் விக்ரம்.
விக்ரமின் அடுத்த படத்தை இயக்குபவர் சுசீந்திரன். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி, நாம் முன்பே அறிவித்த தீக்ஷா சேத். பிரபல தெலுங்கு நடிகை.
இந்தப் படத்திலும் சுசீந்திரன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொடர்கிறது.