Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமீர்கான் எனக்கு வீடு கொடுத்ததாக கூறுவது பொய் - அசின்
கஜினி என்ற ஒரே இந்திப் படம் மூலம் முதல்நிலை நடிகையாகிவிட்ட அசினுக்கும், அந்தப் படத்தின் நாயகன் அமீர்கானுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகவும், அவரது கட்டுப்பாட்டில்தான் அசின் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.
இந்த நிலையில் அசின் மும்பையில் தனி வீடு ஒன்றை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார். முன்பிருந்த அபார்ட்மெண்டை காலி செய்துவிட்டு இந்த புதிய வீட்டுக்குப் போய்விட்டாராம். இந்த வீட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்ததே அமீர்கான்தான் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து சமீபத்தில் அசினிடம் கேட்கப்பட்டது:
"ஏன்தான் தொடர்ந்து என்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதுகிறார்களோ தெரியவில்லை. முன்பு சல்மான்கானுடன் இணைத்து எழுதினார்கள். இப்போது அமீர்கானுடன் இணைத்துப் பேசுகிறார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லை போலிருக்கிறது.
இது என் சொந்த வீடு. நான் சம்பாதித்த பணத்தில் வாங்கியது. யாரும் எனக்கு வாங்கித் தரவில்லை. என் வசதிக்காகத்தான் மும்பையில் இருக்கிறேன். அமீர்கானுக்காக இல்லை. அவருக்கும் எனக்கும் அந்த உறவும் இல்லை. அவர் என் முதல்பட ஹீரோ, அவ்வளவுதான். அத்துடன் அதை மறந்துவிட்டேன். இப்போது லண்டன் ட்ரீம்ஸில் பிஸியாக இருக்கிறேன்...." என்றார் அசின்.