Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மதுரையில் வன்முறை மட்டுமா உள்ளது?-மிளகா இயக்குநர் வேதனை!
இயக்குநர் ரவி மரியாவின் இயக்கத்தில் உருவான படம் மிளகா. இப்படத்தில் நட்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். பூங்கொடி நாயகியாக நடித்துள்ளர்.
மதுரையில் இப்படம்திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு ரவி மரியா, நடராஜ், இணை இயக்குநர் பான்ஸ் ஆகியோர் சென்று ரசிகர்களை சந்தித்தனர்.
அப்போது ரவி மரியா பேசுகையில், மதுரையில் சமீப காலமாக எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வன்முறை, வெட்டுக்குத்து கலாச்சாரத்தையே எடுத்து காட்டியது.
வன்முறை பூமியா மதுரை?. இதனை பார்க்கும் மக்கள் மதுரை என்றாலே வன்முறை பூமி என நினைப்பார்கள்.
மதுரைக்காரனாகிய நான் மதுரை மக்களின் அன்பு, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து உள்ளேன்.
இதில் ஆபாசமோ, வன்முறையோ கிடையாது. இன்றைய தமிழ் சினிமாக்களில் ஆபாச காட்சிகள் அதிக அளவில் வருகிறது. இதனால் குடும்பத்தோடு பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த நிலை மாற வேண்டும். தமிழ் சினிமாவிற்கு ஆபாசம் தேவையில்லை. எனவே குடும்பத்தோடு அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் தமிழ் சினிமாக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் வேதனையுடன்.
சினிமாக்காரர்களே ரவிமரியா சொல்வதிலும் நியாயம் உள்ளது. கூட்டிக் கழித்துப் பாருங்க சரியா வரும்!