Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜாதிப் பெயர்களுடன் உலா வரும் நடிகைகள்-தங்கர் பச்சான் கொதிப்பு!
ஜாதியை ஒழிக்கப் போராடிய தமிழகத்தில், ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உள்ள தமிழகத்தில், ஜாதியை துணைக்கு வைத்துக் கொண்டு நடித்து வரும் நடிகைகளை தமிழ்த் திரையுலகினர் அனுமதிப்பதற்கு தமிழ்த் திரையுலகிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக இயக்குநர் தங்கர்பச்சான் இந்த ஜாதீயத்தை கடுமையாக எதிர்த்துள்ளார். அய்யர், மேனன், ரெட்டி, ஷெட்டி, நாயர், நாயுடு என்ற ஜாதிப் பெயர்களுடன் உலா வரும் நடிகைகளுக்கு தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு மலையாள நடிகை மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு ஒரே கூட்டமாக உள்ளனர் மலையாள நடிகைகள். அவர்கள் அத்தனை பேருமே தங்களது ஜாதிப் பெயரையும் உடன் வைத்துக் கொண்டுதான் உலா வருகின்றனர்.
நவ்யா நாயர், ஸ்வேதா மேனன், நித்யா மேனன் என்று ஒரு கூட்டம் உலா வருகிறது. அதேபோல ஆந்திராவிலிருந்து ஷமீரா ரெட்டி, மேக்னா நாயுடு என்று ஒரு பக்கம் நடிகைகள் கூட்டம். ஷில்பா ஷெட்டி என்று கன்னடத்தைச் சேர்ந்தவரும் முன்பு நடித்து வந்தார்.
இவர்கள்தான் இப்படி என்றால் ஆண்களும் இதில் சளைத்தவர்களாக இல்லை. ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என்று ஒரு வரிசை. அதிலும், இந்த கெளதம் படு விவரமானவர். ஆரம்பத்தில் இவர் படங்கள் இயக்கத் தொடங்கியபோது தன்னை ஒரு மலையாளியாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல் கெளதம் என்ற பெயரை மட்டுமே போட்டு வந்தார். கொஞ்சம் வளர்ந்து தலை தூக்கியவுடன் மேனனை துணைக்குச் சேர்த்துக் கொண்டார்.
இப்படி தமிழ் சினிமாவில் ஜாதிய அடையாளங்களோடு நடமாடுவதற்கு தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சினிமா துறையில் நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் தங்கள் பெயரோடு சாதி பெயரை சேர்த்துள்ளார்கள். சாதி ஒழிப்புக்காக பெரியார் தமிழகத்தில் போராடினார். அரசுகளும் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் ஜி.என். செட்டிசாலை, திருமலைபிள்ளை ரோடு, என பல சாலைகளில் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. தமிழ்ப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் சாதிப் பெயர் வைத்துள்ள நடிகைகளை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது, அவர்களை ஒதுக்க வேண்டும் என்றார் பச்சான்.