Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி-ஐஸ்வர்யா ராய்
எனக்கு தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்குத்தொடர்ந்து நல்ல படங்களும், ரோல்களும், கேரக்டர்களும் கிடைக்கின்றன. இதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
குறிப்பாக நல்ல கேரக்டர்களைக் கொண்ட பீரியட் படங்கள் சரியான இடைவெளியில் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சி தருகிறது. அதுபோன்ற படங்களில் பழைய நடிகைகள் யாரையும் இமிடேட் செய்து நடிக்க நான் முயல்வதில்லை. நானாகவே அதில் தெரிய ஆசைப்படுகிறேன்.
ஆக்ஷன் ரீப்ளே படத்திலும் கூட எந்த பழைய நடிகையையும் நான் காப்பி அடிக்கவில்லை. நானேதான் அதில்தெரிந்தேன்.
70களில் உள்ள கதைக் களம் அது. அதற்கேற்ப மேக்கப், வசன உச்சரிப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளது. இது கடினமான படம் என்பதை படத்தை ஒப்புக் கொண்ட போதே உணர்ந்தேன். இருந்தாலும் என்னால் முடிந்தவரை செய்துள்ளேன்.
இது காமெடிப் படமாக இருந்தாலும் எனது நடிப்புத் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன என்றார் ஐஸ்வர்யா ராய்.