Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'ஜெய் வைக்கும் கோழிக் குழம்பு நல்லா இருக்கும்...!' - ருசி பார்த்த அஞ்சலி
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் - பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல்முறையாகத் தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படத்தின் குழுவினருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், வியாழக்கிழமை.
இதுவரை இப்படியொரு அடக்கமான, நன்கு திட்டமிடப்பட்ட, சுவாரஸ்யமான பிரஸ்மீட் நடந்திருக்குமா என்று கேட்கும் அளவுக்கு கச்சிதமாக அமைந்துவிட்டது நிகழ்ச்சி.
படத்தின் மூன்று பாடல்களைத் திரையிட்டார்கள். மூன்றுமே முத்துக்கள் எனும் அளவு இசை, காட்சியமைப்பில் அசத்தியிருந்தார்கள் புதிய இசையமைப்பாளர் சத்யாவும் இயக்குநர் சரவணனும்.
இந்தப் படம் குறித்த தனது அறிமுக உரையில் இப்படிச் சொன்னார் ஏ ஆர் முருகதாஸ்:
"வாழ்க்கையில் சில நொடி நேர எச்சரிக்கையின்மை ஒரு குடும்பத்தில் எத்தனை பெரிய தீராத துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதைச் சொல்லும் படம் இந்த எங்கேயும் எப்போதும். என் நண்பன் இயக்குநர் திருப்பதிசாமி, மிக இளம் வயதில் ஒரு கார் விபத்தில் பலியாகிப் போனான். அந்த சம்பவம் என்னை அதிகமாகப் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் இந்தப் படத்தின் திரைக்கதை என்றுகூட சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெறும் மெசேஜ் அல்ல... சுவாரஸ்யமான ஒரு சினிமாவாக உருவாகியிருக்கிறது" என்றார்.
பின்னர் கேள்வி பதில் பகுதி ஆரம்பமானது.
ஒவ்வொரு கேள்விக்கும் அநாவசியமாக ஒரு வார்த்தையைக் கூட விரயம் செய்யாமல் நச்சென்று பதிலளித்தனர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்.
படத்தின் ஒரு ஜோடியான ஜெய்-அஞ்சலியிடம்தான் அதிக கேள்விகளைக் கேட்டனர் நிருபர்கள். எப்படியாவது இருவரின் வாயையும் பிடுங்கி, அவர்களைப் பற்றிய நீண்ட நாள் கிசுகிசுவை உறுதிப்படுத்த முயன்றும், இருவரும் நழுவும் மீன்களாக சாமர்த்தியம் காட்டியது சுவாரஸ்யம்.
அஞ்சலிக்கும் உங்களுக்கும் காதல் என்று செய்தி வருகிறதே என்று ஜெய்யிடம் கேட்டனர். அதற்கு அவர், "இந்த கேள்வி பிடித்து இருக்கிறது. ஆனால், எனக்கு காதல் வரவில்லை. அஞ்சலியுடன் காதல் காட்சியில் நடித்து இருக்கிறேன். அதுதான் உண்மை. அவருடன் எனக்கு காதல் இல்லை..." என்றவரிடம், "சரி அஞ்சலியிடம் உங்களுக்குப் பிடிச்சது என்ன என்றாவது சொல்லுங்கள்" என்றார் ஒரு நிருபர்.
"அஞ்சலியிடம் எனக்கு பிடித்தது, அவருடைய நடிப்புதான்,'' என்று எஸ்கேப்பானார் ஜெய்.
அடுத்து அஞ்சலியிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, "ஜெய் நன்றாக நடிப்பார். அதேபோல் நன்றாக சமைப்பார். அவர் சமைக்கிற கோழிக் குழம்பு ருசியாக இருக்கும். அவ்வளவுதான். எங்கள் இடையே இருப்பது நட்புதான். காதல் அல்ல.
எனக்கு ரொம்ப சின்ன வயதுதான். இப்போதுதான் வளர ஆரம்பித்து இருக்கிறேன். காதல், திருமணம் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை,'' என்றார்.
செப்டம்பர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது எங்கேயும் எப்போதும்!