twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்காக நடிப்பையே தியாகம் செய்தவர் நயன்தாரா! - பிரபு தேவா திடீர் அறிக்கை

    By Shankar
    |

    Prabhu Deva and Nayanthara
    பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் பேசுவதைத் தவிர்ப்பவர் பிரபுதேவா.

    அவரையும் நயன்தாராவையும் இணைத்து கிசுகிசுக்கள் பரபரப்பாக வெளியானபோதும் அமைதி காத்தார்.

    முதல்முறையாக இப்போது நயன்தாராவுடன் திருமணம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இதுகுறித்து பிரபுதேவா தனது பிஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நான் என்னுடைய தனிப்பட்ட விஷங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவன். ஆனால், எனக்கும் நயன்தாதாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றி பல தவறான செய்திகள் பரவி வருகின்றன.

    இந்த நேரத்தில், இந்த நாளில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று நேரம் குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதைப் படித்தேன். அதன் பின்னரே இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வந்தேன்.

    மறைப்பதற்கு எதுவுமில்லை...

    எனக்கும் நயன்தாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணம், உலகுக்கு வெளிப்படையாக இந்த நேரத்தில், இந்த நாளில் என சொல்லப்பட்ட பின்பே நடக்கும். இனிமேல் இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்களுடைய திருமணத்திற்கு இருவீட்டாரின் பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் தான் நடக்கும்.

    எனக்காக தியாகம் செய்தார் நயன்தாரா...

    என் மேல் வைத்திருந்த காதலுக்காக திரையுலகில் நடிப்பதை தியாகம் செய்தவர் நயன்தாரா. அவர் சீதைப் படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு படமான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் கிடைத்த வாய்ப்புகள் மாதிரி புனிதமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுக்க இப்போதும் தயாராக இருக்கிறார்," என்று கூறியுள்ளார்.

    English summary
    Prabhu Deva has finally broken his silence about his marriage with Nayanthara. In his recent statement he says, “I am always been a very private person and never like to discuss my personal life. But today I feel that there are too much written and spoken about me and my marriage. I have been reading reports about the date, time, venue of my marriage to Nayanthara in newspapers and Internet. All I have to say is that, we will get married and the date will be announced to the world when the right time comes." Speaking about Nayanthara, the actor turned director says, "She stopped signing films when she was at the pinnacle of her career for our love and we wanted to get married with the blessings of our parents. Even now, if some good role like the one in Sri Ramarajyam comes her way, Nayanthara is open to doing it till the wedding"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X