twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீத்துவுடன் குத்துப் பாட்டு-சோகத்தில் அமீர்

    By Sudha
    |

    நீத்து சந்திராவுடன் சேர்ந்து ஆடியுள்ள குத்துப் பாட்டுக்காக பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம் அமீர்.

    மெளனம் பேசியதே முதல் பருத்தி வீரன் வரை இயக்குநராக கலக்கிக் கொண்டிருந்த அமீர் பின்னர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது ஒத்தப் பாட்டுக்கு, நீத்து சந்திராவுடன் இணைந்து செமத்தியான குத்தாட்டம் போட்டுள்ளார் யுத்தம் செய் படத்துக்காக.

    ஆனால் அந்தப் பாட்டுக்கு ஆடியதற்காக தற்போது வருத்தத்தில் உள்ளாராம் அமீர்.

    மிஷ்கின் இயக்கி, சேரன் நாயகனாக நடித்துள்ள படம்தான் யுத்தம் செய். இதில் ஒரு குத்துப் பாட்டை வைத்துள்ளார் மிஷ்கின். ஏற்கனவே இவர் சித்திரம் பேசுதடி படத்தில் வைத்த வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் குத்துப் பாட்டு இன்று வரை பட்டி தொட்டியெங்கும் பேவரைட் பாட்டாக உள்ளது. அதேபோல கத்தாழைக் கண்ணாலே பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

    அந்தவரிசையில் யுத்தம் செய் படத்தில் இவர் வைத்துள்ள அமீர்-நீத்து சந்திரா ஆடியுள்ள குத்துப் பாட்டும் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மிஷ்கின். ஆனால் அமீர்தான் சோகமாக உள்ளாராம்.

    ஏன் இந்த சோகம்...?

    மிஷ்கினும், சேரனும் எனது நண்பர்கள். அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால்தான் இப்பாடலுக்கு ஆடினேன். ஆனால் இதுபோன்ற பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு உண்மையில் இஷ்டமே இல்லை. எனவே இனிமேல் இதுபோல ஆட மாட்டேன்.

    அது மட்டுமல்ல படம் வெளியாகும் போது இந்தப் பாடலைப் பார்க்கவும் மாட்டேன் என்கிறார் மிதிக்கக் கூடாததை மிதித்து விட்டது போல வெறுப்புடன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X