Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என் மீது யாரும் கை வைக்க முடியாது!-நயன்தாரா
சிம்பு, பிரபுதேவா என அவரது நட்பு இப்போதும் தொடர்கிறது. முன்பை விட இப்போது அடிக்கடி சிம்புவைச் சந்திக்கும் நயன்தாரா, பிரபு தேவாவுடனான தனது உறவை 'கோயிங் ஸ்டெடி' எனும் அளவுக்குத் தொடர்கிறாராம்.
சமீபத்தில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பிரபுதேவாவுடன் சேர்ந்து மேடையில் ஆட்டம் போட்டார் பிரபு தேவா. இதைத் தொடர்ந்து அவரை உதைப்பதற்காகத் தேடுவதாக பகிரங்கமாக அறிவித்தார் பிரபு தேவா மனைவி ரம்லத்.
இதுகுறித்து நயன்தாராவிடம் நிருபர்கள் கேட்டனர். 'உதை' மேட்டருக்கு நேரடியாக வராத நயன்தாரா, சுற்றி வளைத்து ரம்லத்தை எச்சரிக்கும் விதத்தில் கருத்து கூறினார்.
அதற்கு பதிலளித்த நயன்தாரா, "நான் சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த ஆண்டுதான் எனக்கு கொஞ்சம் சோதனை. இந்த ஆண்டு எனக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. எனது படங்கள் பிரமாதமாகப் போகின்றன.
என் மீது யாரும் கை வைத்துவிட முடியாது. எனக்கும் எல்லாம் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்துதான் செய்கிறேன். எனவே சும்மா யாரும் கத்த வேண்டாம். சிம்பு குறித்து எதற்காக என்னிடம் கேட்கிறார்கள் என்று புரியவில்லை.
அவருடன் இணைந்து நடனமாடியது மறக்க முடியாத நிகழ்ச்சி. மற்றபடி பிரபு தேவா குறித்த எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போது நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.." என்றார்.