Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நயன்தாராவுக்காக சிபாரிசு செய்யவில்லை! - பிரபுதேவா
இதுவரை கிசுகிசுவாக மட்டுமே இருந்த தங்கள் காதலை, ஒன்றாக வெளியில் சுற்றுவது மற்றும் பேட்டிகள் மூலம் நயன்தாராவும் பிரபுதேவாவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரவுரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு இருதரப்பிலும் சம்மதம் தரப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நயந்தாராவை இந்திப் பட உலகில் அறிமுகம் செய்து வைக்க பிரபு தேவா முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபு தேவாவிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது:
இந்தியில் நான் இயக்கிய படம் ஹிட்டானதால் மீண்டும் அங்கு இன்னொரு படம் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான கதை வேண்டுமல்லவா... அது மட்டுமல்ல சல்மான்கான் ஒன்றும் சும்மா இல்லை. இப்போது மூன்று படங்களில் பரபரப்பாக உள்ளார். எனவே நான் அடுத்த இந்திப்படம் செய்ய கொஞ்ச நாளாகும்.
இந்தியில் நயன்தாராவுக்காக நான் சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. ஜெயம் ரவியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இன்னும் கதாநாயகி யாரென்பது முடிவாகவில்லை, என்றார் பிரபுதேவா.