Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்தார்!-நடிகர் ஜெயமணி
சாது படத்தில் காமெடியனாக அறிமுகமானார் ஜெயமணி. அதன் பிறகு 70 படங்களில் நடித்துவிட்டார். வடிவேலுவும் ஜெயமணியும் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தனர். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட, பிரிந்துவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர்.
வடிவேலு- சிங்கமுத்து மோதல் குறித்து ஜெயமணி கூறியதாவது:
தலைசிறந்த காமெடி நடிகர் வடிவேலு, அவர் மலை. பிற காமெடியர்கள் மடு. ஆரம்ப காலத்தில் எனக்கும் வடிவேலுவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால், எங்களை சதி செய்து பிரித்து விட்டார் சிங்கமுத்து. என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார்.இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டுவிட்டோம்.
சிங்கமுத்துக்கு வடிவேலு எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். அவருக்கு துரோகம் செய்து விட்டார். நல்ல மனிதரான வடிவேலுவை சிங்கமுத்து ஏமாற்றியது உண்மை.
நான் அரசு வேலையை உதறி விட்டு சினிமாவுக்கு வந்தேன். வளைந்து நெளிந்து போகத் தெரியாததால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இப்போது சினிமா உலகின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டேன். வடிவேலுவும் அவரது படங்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார் என்றார்.