Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'அதெல்லாம் எனக்குப் பிடிக்காது!' - ஸ்ரேயா
சேச்சே... அதெல்லாம் எனக்குப் பிடிக்காது... நான் அந்த மாதிரி பெண்ணும் அல்ல. காக்டெயில் பார்ட்டி, டிஸ்கொத்தே, பண்ணை வீடுகளில் கொண்டாட்டம் போன்றவற்றுக்கெல்லாம் வேறு ஆளைப் பாருங்கள்!"
- நேற்று மும்பையில் தன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரேயா சொன்னதுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது!
பொதுவாக நடிகைகளின் பிறந்த நாள் விழா இப்படித்தானே கொண்டாடப்படுகிறது என்ற நினைப்பில், அவரிடம் உங்க பிறந்த நாளை எந்த பண்ணை வீட்டில் அல்லது நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினீர்கள் என கேட்டபோது, சட்டென்று சீரியஸாகிவிட்டார் ஸ்ரேயா.
"கேளிக்கை விருந்துகளோடு பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு பிடிக்காது. பிறந்த நாளை எப்போதும்போல என் வீட்டில் பெற்றோருடன் கொண்டாடினேன். சில நண்பர்களை சந்தித்தேன். படப்பிடிப்பிலும் பங்கேற்றேன். மகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவது தேவையற்றது. அது வழக்கமான ஒரு நாள்தான் என்னைப் பொருத்தவரை," என்றார்.
தமிழில் ஸ்ரேயா நடித்த கடைசி படம் ரௌத்திரம். வேறு படங்கள் கைவசம் இல்லை. சிம்புவுடன் நடிக்கக் கேட்டிருப்பதாகச் சொல்கிறார். விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்களாம்.
மலையாளத்தில் ஹீரோ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன!