Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வேட்டிக்குள் நுழைந்த எறும்பை நசுக்கி எறிய வேண்டியதுதான்- வடிவேலு பதிலடி
சிங்கமுத்து, வடிவேலு மோதலால் கோலிவுட் கலகத்துக் கிடக்கிறது. இருவரும் மாறி மாறி புகார் கூறி பேட்டி அளித்து வருகின்றனர்.
என்னுடைய பாவம் வடிவேலுவையும், அவரது பரம்பரையையும் சும்மா விடாது என்று சாபம் விட்டுள்ளார் சிங்கமுத்து. இநத நிலையில் வேட்டிக்குள் புகுந்து எறும்பு என்று சிங்கமுத்துவை மறைமுகமாக சாடியுள்ளார் வடிவேலு.
கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. வடிவேலு முதல் பிரதியை வெளியிட, விவேக் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், வடிவேலு பேசுகையில்,
நானும், விவேக்கும், கருணாசும் நிறைய படங்களில் கூடி கும்பமியடித்திருக்கிறோம். இப்போது தனித்தனியாக சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. மக்கள் எப்போதும் டென்ஷனோடு அலைகிறார்கள். மாலையில் வீட்டுக்குச் சென்றால் குடும்பத்தோடு பார்த்து சிரிப்பது எங்கள் நகைச்சுவை காட்சிகளைத்தான்.
நகைச்சுவை சேனல்கள் மக்களுக்கு ரிலாக்சை கொடுக்கிறது. எனக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி நசுக்கி தூக்கி எறிய வேண்டியதுதான் என்றார் வடிவேலு.