Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'புளூ பிலிம்ஸ்' என் அரிய பொக்கிஷம்: ராம் கோபால் வர்மா!
சர்ச்சையின் மறுபெயர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நாங்கள் ஒன்றும் சும்மா அப்படி சொல்லவில்லை. காரணம் இருக்கு. பாட்ஷா படத்தில் ரஜினி நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் அழகு என்று பாடுவார் நக்மா. அதற்கு மாறாக இயக்குனர் ராம் கோபால் வர்மா நின்றால், பேசினால், படம் எடுத்தால் சர்ச்சை தான்.
அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நீங்கள் எதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் உடனே என்னுடைய புளூ பிலிம்ஸ் கலெக்ஷன் தான் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
என்ன தான் சினிமாத் துறையே அவரை சகட்டுமேனிக்கு விமர்சித்தாலும் மனுஷன் மசிவதாக இல்லை. நீங்கள் பேசுவதைப் பேசுங்கள், நான் இப்படித் தான் இருப்பேன் என்கிறார்.
நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதை மக்கள் சில நேரம் ஜிரணித்தாகத் தான் வேண்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இசையைக் கேட்டுக் கொண்டும், படம் இயக்கிக் கொண்டும், அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டும் கழிக்க விரும்புகிறேன் என்றார்.
பிறர் என்னை விமர்சிப்பதை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது தான் அவர்களுக்கு கடுப்பாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.