Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'நயன்தாரா'...என் தனிப்பட்ட விஷயம்-பிரபுதேவா
பிரபு தேவா - நயன்தாராவுக்கு இடையே காதல், இருவரும் ரகசியமாகக் கல்யாணம் செய்து கொண்டு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துகிறார்கள் என்றெல்லாம் சில மாதங்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த விவகாரத்தை பிரபுதேவா மனைவி ரம்லத் மீடியாவில் பெரும் விவகாரமாக்கினார். பிரபு தேவாவை அபகரித்துக் கொள்ளத் திட்டம் போடும் நயன்தாராவை உதைப்பேன் என்ற அளவுக்கு பேட்டிகள் கொடுத்து, அவர்களின் குடும்ப சண்டையை அம்பலமாக்கினார்.
இத்தனை நடந்தாலும், நயன்தாரா - பிரபு தேவா இருவரின் சந்திப்புகளும் தொடர்கின்றனவாம். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தாராம்.
பிறகு குழந்தையை அழைத்துக் கொண்டு நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமான அவர் இன்னொரு சண்டைக்குத் தயாரானார்.
ஆனால் இந்த முறை மீடியா பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக பிரபு தேவா இந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்குக்ி கூடத் தெரியும்.
நானும் நயன்தாராவும் சந்தித்துக் கொள்ளவோ, பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்கவோ பயப்படவில்லை. நாங்கள் வெளியில் போவதெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள்..." என்று கூறியுள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!