மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர்.
மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர்.
அலை படத்தில் முதல்முறையாக சிம்புவும் த்ரிஷாவும் நடித்தனர். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. பல ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சிம்பு - த்ரிஷா ஜோடி பேசப்பட்டது.
நிஜத்திலும் த்ரிஷாவை விட இளையவர் சிம்பு. இந்த வயது வித்தியாசமே இந்த ஜோடியின் சிறப்பாக சிலர் கூறுகின்றனர். எனவே இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிம்பு கூறுகையில், "த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.
த்ரிஷா கூறுகையில், "சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











