Just In
- 11 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 11 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 11 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 12 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர்
- Automobiles
3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அரசியலா... ம்ம்... அப்புறம் பதில் சொல்லட்டா? - சினேகா

-அரசியல் பிரவேசம் செய்யும் திட்டமுள்ளதாமே என்ற நிருபர்களின் கேள்விக்கு புன்னகை இளவரசி சினேகா அளித்த பதில் இது.
மதுரை அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய மருத்துவ மையத்தை நடிகை சினேகா இன்று, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
அவர் இந்த விழாவுக்கு வருகிறார் என்பதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். வழக்கம் போல சினேகா இவர்கள் பிடியில் மாட்டிக் கொள்ளவிருந்தார். ஆனால் அதற்குள் போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் நடிகை சினேகா நிருபர்களிடம் கூறுகையில், "மருத்துவ உலகில் ஓமியோபதி மருத்துவம் ஒரு சிறந்த மருத்துவ முறையாகும். ஆபரேசன் இல்லாமல் ஓமியோபதி மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்தலாம். இந்தியாவில் தகுதி வாய்ந்த மருந்துகள் ஓமியோபதியில் உள்ளன. மனிதர்களுக்கு ஓமியோபதி மருத்துவம் ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது," என்று ஒரு லெக்சரே கொடுத்துவிட்டார்.
முரட்டுக் காளை படத்தில் நடிப்பதற்காக மதுரைக்கு வந்த அவரை, இந்த திறப்பு விழாவுக்கு கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டாராம்.
தமிழில் விடியல் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகச் சொன்னவரிடம், "நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்குப் பின் வந்த சிலர் கூட அரசியல் பிரவேசத்துக்கு நாள் பார்க்கிறார்கள். உங்கள் ஐடியா என்ன? அரசியலில் குதிப்பீர்களா?" என்று கேட்க, அப்படியே 'ஷாக்' ஆகி நின்றுவிட்டார்!
உடனே சுதாரித்துக் கொண்டவர், "ஏங்க என்னை வம்புல மாட்டிவிடற ஐடியாவிலதான் வந்திருக்கீங்களா... படப்பிடிப்பு இடைவேளைல சும்மா வந்து போகலாமேன்னு வந்தேன். உண்மையில் எனக்கு அரசியல் பத்தி எந்த ஐடியாவும் இல்ல. இதில் நான் அரசியலுக்கு எங்கே வரப் போகிறேன். இருந்தாலும், இதுக்கு இப்போ பதில் சொல்வது சரியா இருக்காது. ம்ம்... கொஞ்ச நாள் போகட்டும்," என்றார்.
நீங்களுமா சினேகா!