Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சேச்சே... அவர் எனக்கு அண்ணன் மாதிரி!' - ஹன்ஸிகாவின் அடேங்கப்பா விளக்கம்
எனக்கு வயசு 19தான் ஆகிறது. சின்னப் பொண்ணு நான். ஆனா இன்னொருத்தர் கணவரை அபகரித்ததாக வரும் செய்திகளை தாங்க முடியவில்லை. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி, என்றார் ஹன்சிகா மோத்வானி.
பிரபுதேவா இயக்கியுள்ள எங்கேயும் காதல் பட நாயகி ஹன்சிகா. இவருக்கும் பிரபுதேவாவுக்கும் திடீர் காதல் அரும்பியதாகவும், இருவரையும் ஹோட்டலில் வைத்து கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா சண்டை போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஹன்ஸிகா கன்னத்தில் நயன் அறைந்தார் என்று கூற ஒரு செய்தி வெளியானது.
பிரபு தேவா வழக்கம் போல மவுனம் காத்தார்.
ஆனால் ஹன்ஸிகா இதை இப்போது மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை," என்றார்.
நம்புறோம் தாயீ!!