twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்வராகவன் குடும்பத்தைக் கெடுக்க முயற்சிக்கவில்லை - ஆன்ட்ரியா

    By Shankar
    |

    Andrea
    செல்வராகவன் குடும்பத்தை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை ஆன்ட்ரியா கூறினார்.

    செல்வராகவனுக்கும் அவரது முதல் மனைவி நடிகை சோனியா அகர்வாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விவாரத்து வரை போக காரணமானவர் நடிகை ஆன்ட்ரியாதான் என்று கூறப்பட்டது.

    இதுகுறித்து ஏராளமான செய்திகள் ஊடகங்களில் வந்தன. இதை உறுதிப் படுத்தும் வகையில் ஆன்ட்ரியா, செல்வராகவனின் அனைத்துப் படங்களிலும் ஆஸ்தான நாயகியாக இருந்தார்.

    ஆனால் செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அடுத்து, செல்வராகவனின் படங்களிலிருந்து ஆன்ட்ரியா நீக்கப்பட்டார்.

    இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார்.

    "இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் யார் குடும்பத்தையும் கெடுக்கும் எண்ணம் கொண்டவள் அல்ல. திருமணமாகி மனைவியுடன் வாழும் ஒருவரை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறப்படுவது அநியாயம். செல்வராகவன் அவரது வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டும்," என்றார்.

    English summary
    Actress Andria denies the charges of interfering in Selvaragavan's marriage life. The actress told that she would never try to interfere in his marriage life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X